மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை கிழக்கு பாண்ரா பகுதியில் நேற்று இரவு கன மழை கொட்டித் தீர்த்தது. அப்பொழுது அந்த பகுதியில் உள்ள ஹார்வாடி சாலை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஒரு வீட்டின் சுவர் கனமழை காரணமாக இடிந்து விழுந்து மற்றொரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் இடிந்து விழுந்த வீட்டில் இருந்தவர்கள் உட்பட அண்டை வீடுகளில் இருந்த 15 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்பொழுது இடிபாட்டில் சிக்கி இருந்த 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டிட விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…