உள்துறை அமைச்சர் வெறுப்பையும் அவநம்பிக்கையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்து விட்டார்.
அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை, நேற்று மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் அசாம் போலீசார் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரு மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசி எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், மிசோரம்- அசாம் இடையிலான எல்லை பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த தேசத்தின் உள்துறை அமைச்சர் வெறுப்பையும் அவநம்பிக்கையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்து விட்டார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகின்றது என்று விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…