காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானுடன் விளையாட்டு மற்றும் அனைத்து தொடர்பையும் இந்தியா துண்டிக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் விளையடும் போட்டியில் இந்தியஅணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.இது குறித்து BCCI அரசு எடுக்கும் முடிவுக்கு கட்டுபடுவோம் என்று தெரிவித்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவிக்கையில் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாட மற்றும் வர்த்தக தொடர்பு என எதற்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் BCCI தீவிரவாத நாடுகளுடன் இருக்கும் கிரிக்கெட் தொடர்பை துண்டிக்க வேண்டுமென்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…