அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு விளக்கேற்றிய அமித்ஷா.!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசியபோது , ஞாயிற்றுக்கிழமை (அதாவது இன்று) இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளின் அனைத்து  மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சிற்கு பலர் ஆதரவாகவும் , எதிராகவும் கருத்துக்களை கடந்த சில நாள்களாக சமூக வலைதளைங்களில் பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில் பிரதமர் மோடி வேண்டுகோளுக்கிணங்க நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் ஒற்றுமை ஒளியை ஏற்றினர்.

இதையெடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இல்லத்தில் அனைத்து விளக்குகளையும் அணைத்த பின்னர் விளக்குகளை ஏற்றினார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்