மேற்கு வங்கத்தில் வீடு தேடி வரும் மதுபானம்.! அறிமுகம் செய்தது அம்மாநில அரசு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மேற்கு வங்க மாநிலத்தில் மது பிரியர்கள் வீடுகளுக்கே சென்று மதுபானங்களை விநியோகிக்கக் கூடிய வசதியை அம்மாநில அரசு ஏற்படுத்தியுள்ளன. 

நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதில், குறிப்பாக தனிக்கடைகள் மற்றும் மதுபான கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பல மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கடை வாசலில் மதுபிரியர்கள் வரிசையில் இன்று மதுபாட்டில்களை வாங்கி செல்கிறார்கள்.

இதனிடையே மதுக்கடைகளில் கூட்டம் குவிந்து வருவதால் தனிமனித இடைவெளி மற்றும் சமூக விலகலை பின்பற்ற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநிலத்தில் மது பிரியர்கள் வீடுகளுக்கே சென்று மது விநியோகிக்கும் வசதி செய்யபட்டுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் கூட்டம் கூடுவதை குறைப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்வதற்கும் ஆன்லைன் முன்பதிவு மற்றும் மது பிரியர்கள் வீடுகளுக்கு சென்று வழங்குவதற்க்கான ஒரு இணையதளத்தை மேற்கு வங்க மாநில மதுபானங்கள் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையத்தில் 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளது.

இதற்கு முன்னதாக, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வீட்டிற்கு மதுபான விநியோகத்தை ஆரம்பித்திருந்தன. பஞ்சாப் மாநிலத்தில் மது பிரியர்கள் வீட்டிற்கே சென்று மது விற்பனை செய்யப்படுவதாக அறிவித்திருந்தது. அதில், ஒரு வீட்டுக்கு 2 லிட்டர்கள் வரை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அளவை அந்தந்த பகுதியின் கலால் மற்றும் வரி உதவி ஆணையர்கள் நிர்ணயித்துக் கொள்ளவும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுமுடக்கம் காலம் முடியும் வரை மட்டுமே இந்த வசதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

3 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

40 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

15 hours ago