வீடு தேடி வரும் ஏடிஎம் ! சேவையை தொடங்கிய எஸ்பிஐ வங்கி

கொரோனா காரணமாக வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் மொபைல் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி.
இந்தியாவில் தற்போது 39,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,301 பேர் உயிரிழந்துள்ளனர். 10633 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா காரணமாக முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,பின் மே-3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.தற்போது மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர்.இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் அவதிப்பட்டனர்.எனவே அரசு சார்பில் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வீடுகளுக்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த ஏற்பாடு மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் தான் இந்தியாவின் முதன்மை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் வகையில் புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.அதாவது ,குஜராத், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் ஆகிய மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் மொபைல் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி.நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருதியே ,அவர்களின் வீடு தேடி ஏடிஎம்கள் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
SBI branches in Gujarat, Karnataka, Punjab & Tamil Nadu started Mobile ATM service for people staying indoors. Our branches across the country are committed to ensuring the safety & convenience for customers. Fighting #COVID19 together. #ProudSBI @DFS_India @challasetty pic.twitter.com/dT6kWbsM89
— State Bank of India (@TheOfficialSBI) May 3, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025