யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் முதல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2 நாட்களில் தினசரி பாதிப்பு 500-ஐ கடந்துவிட்டது.
இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,32,439 ஆக அதிகரித்துள்ளதை தொடர்ந்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது. இதன்காரணமாக அம்மாநிலத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் ஏப்ரல் 18-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் 11-ம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…