வரலாற்று நிகழ்வு.! திறக்கப்பட்ட ராமர் சிலை.! பிரதமர் மோடி உள்ளிட்டோர் சாமி தரிசனம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், லட்சக்கணக்கான மக்கள், விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. ராமர் கோயிலில், பால ராமர் சிலை பிரதிஷ்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இதற்காக பிரதமர் மோடி 11 நாட்கள் கடும் விரதத்தை மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் இருந்து எடுத்து வந்த புனித தீர்தத்துடன் இன்று ராமர் கோயிலுக்கு வருகை தந்து விழாவில் பங்கேற்றுள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலின் சிறப்புகள்… இரும்பு இல்லாமல் பிரமாண்ட கட்டுமானம்!

இன்று நண்பகல் சரியாக 12.20 மணிக்கு மேல், ராமர் கோயிலுக்குள் சிலை திறப்பதற்கான பிராண பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால்தாஸ், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கோயிலில் ராமர் சிலை நிறுவுதல் தொடர்பான சடங்குகளை பிரதமர் மோடி செய்தார்.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு பெற்றது. அதன்படி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கண்களில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் துணி அகற்றப்பட்டு பால ராமர் சிலைக்கு உயிரூட்டப்பட்டது. மலர்கள், தங்க ஆபரணங்களால் பால ராமர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. பால ராமருக்கு முதல் பூஜையை பிரதமர் மோடி செய்தார். அதாவது, ராமர் சிலைக்கு முதலாவதாக பிரதமர் மோடி, பழங்கள் வைத்து படைத்து, தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து மோகன் பகவத், ஆனந்த் படேல், யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வழிபாடு செய்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ ராம பகவானுக்கு, பிரதமர் மோடி தங்க கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!

மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…

7 hours ago

அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?

சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…

7 hours ago

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

9 hours ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

9 hours ago

MI vs DC: பிளே ஆஃப்-க்கு தகுதி பெறப்போவது யார்? டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு.!

மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…

11 hours ago