பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் கடந்த 2008-ம் ஆண்டு பிரியா எனும் பல் மருத்துவரை மணமுடித்தார். இந்த நிலையில் சச்சின் பன்சால், தன்னை அடிப்பதாகவும், வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக, பிரியா தரப்பில் பெங்களூரு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் திருமணத்தின் போது சச்சின் பன்சாலுக்கு தனது தந்தை ரூ.50 லட்சம் வரதட்சணையாக அளித்ததாகவும், பின்னர் கூடுதலாக ரூ.11 லட்ச கொடுத்ததாகவும், அவரது மனைவி பிரியா தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பெயரிலுள்ள சொத்துகளையும் சச்சின் அவரது பெயருக்கு மாற்றிதரக்கோரி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், அவரது குடும்பத்தினரும் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் கூறியுள்ள பிரியா, டெல்லியிலுள்ள தனது சகோதரிக்கும் தனது கணவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். சச்சின் பன்சால், அவரது தந்தை சத்ப்ரகாஷ் அகர்வால், தாய் கிரண் பன்சால், சகோதரர் நிதின் பன்சால் ஆகியோர் மீது இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரதட்சணை தடைச் சட்டத்தின் 3 மற்றும் 4 பிரிவுகளின் கீழ் சச்சின் பன்சால் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சச்சின் பன்சால் இந்த வழக்கில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…