குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த இந்தி நடிகை பாயல் ரோகத்கி சமீபத்தில் ஜவஹர்லால் நேரு குடும்பத்தை பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் பாயல் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் நேற்று ராஜஸ்தானின் பண்டியில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஆனால் அவரது மனுவை நீதிபதி நிராகரித்தார்.மேலும் வருகின்ற 24-ம் தேதி வரை பாயலை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதை தொடர்ந்து பாயல் ரோகத்கி சிறையில் அடைக்கப்பட்டார்.
நடிகை பாயல் ரோகத்கி வழக்கறிஞர் பூபேந்திர சகாய் சக்சேனா ஜாமீன் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறினார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…