ஹிமாச்சலப்பிரதேச நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு..!

Published by
Sharmi

ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் புதைக்குழிகளில் சிக்கிய 23 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் கடந்த 11 ஆம் தேதி மதியம் 12.45 மணியளவில் ரெகாங் பியோ-சிம்லா என்ற நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைகுழியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில்  ராம்பூர்-ஜூரி என்ற இடத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து மீது பாறைகள் உருண்டு மேல் விழுந்ததால், பேருந்து நிலச்சரிவில் சிக்கியது.  அருகில் சென்று கொண்டிருந்த கார் மீதும் பாறைகள் விழுந்துள்ளது.

தகவலறிந்து வந்த இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பேருந்து மற்றும் வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.மேலும், இதில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இன்று 6 பேரின் உடல்கள் இந்த நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Published by
Sharmi

Recent Posts

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!  

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

9 minutes ago

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

1 hour ago

“இன்னும் 10 வருஷம் இருக்கே.!” ஓய்வு குறித்த கேள்விக்கு ‘கிங்’ கோலியின் நச் ரீப்ளே!

துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…

2 hours ago

“ஒன்னு ஹீரோ, இல்லனா ஜீரோ” சாம்பியன்ஸ் டிராபி வெற்றி குறித்து ஜடேஜா கருத்து.! ஓய்வுக்கு மவுனம்…

துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…

3 hours ago

நாவடக்கம் வேண்டும்! கடிதம் எழுதியது நீங்கள் தானே? தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை)  தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…

3 hours ago

“திமுக எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்”… பேசிவிட்டு பின் வாங்கிய தர்மேந்திர பிரதான்!

டெல்லி :  இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…

4 hours ago