ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழையில் சிக்கி 10 பேர் பலி..!

Default Image

ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழையில் சிக்கி ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹிமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது குறித்து தெரிவித்துள்ள ஹிமாச்சலப்பிரதேச பேரிடர் மேலாண்மை கழகம், கடந்த 24 மணி நேரத்தில் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் தற்போது 123 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது.

இந்த கனமழையால் தோட்ட விவசாயிகளுக்கும், விவசாயிகளுக்கும் ரூ.1,108 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கனமழையால் கடந்த 130 நாட்களில் 12 பேர் மாயமாகி உள்ளனர்.  இதனை தொடர்ந்து அங்கு  857 வீடுகள் பெருமளவு பாதிப்பு அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்