ஜம்மு-காஷ்மீரில் அதிவேக இணைய சேவைக்கான தடையை வரும் ஆகஸ்ட் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
ஜம்மு காஷ்மீரில் அதிவேக இணைய சேவைக்கான தடை வரும் ஆகஸ்ட் 19 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இதுகுறித்து முதன்மை செயலாளர் இல்லம் வெளியிட்டுள்ள உத்தரவில் பாதுகாப்புப் படையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக திட்டமிடுவதை தவிர்ப்பதற்காக மொபைல் மூலமாக அதிவேக இணைய சேவையை பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் அவசியமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ம் தேதி ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். பின்பு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைய உள்ளதால் , வரும் வாரங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அதிவேக இணையத்திற்கான தடை ஆகஸ்ட் 19 வரை நடைமுறையில் இருக்கும், மேலும் மொபைல் தரவுக்கான இணைய சேவை 2 ஜி வேகத்தில் கிடைக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…