கொரோனாவிலிருந்து மீண்டு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனாவிலிருந்து காத்து கொள்ள உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் முயற்சியை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் கொரோனாவிலிருந்து மீண்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘கோவிஷீல்டு தடுப்பூசிகள் மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் டெல்டா மாறுபாட்டின் நடுநிலைப்படுத்தல்’ என்ற தலைப்பில் ஐ.சி.எம்.ஆர். மற்றும் புனேவில் அமைந்துள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா பாதித்து அதிலிருந்து வெளிவந்தவர்கள் இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுக்கு கப்பா மற்றும் டெல்டா வகை கொரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பல்வேறு பிரிவுகளில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் ரத்த மாதிரி மூலமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களிடம் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…