சகோதரருடன் உறவு ..12 வயது சிறுமி கருவை கலைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

Published by
murugan

கேரளாவில் 12 வயது சிறுமி தனது மைனர் சகோதரனுடன் உடலுறவு வைத்திருந்தார். அதன் காரணமாக அந்த சிறுமி  கர்ப்பமானார். இதற்கிடையில் அந்த சிறுமியின் நடத்தையில்  மாற்றம் ஏற்பட்டது. இதனால் அந்த சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி காத்திருந்தது.

பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மகளின் கர்ப்பத்தை மருத்துவமனை மூலம் கலைக்க முடிவு செய்து அந்த சிறுமியின் பெற்றோர் சார்பில் கர்ப்பத்தை கலைக்க கேரள உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் சிறுமியின் கர்ப்பத்தை பரிசோதிக்க மருத்துவ குழு அமைக்க உத்தரவிட்டிருந்தது.

மருத்துவ குழு அமைக்கப்பட்ட பிறகு சிறுமி 34 வார கர்ப்பமாக இருப்பதாகவும், கரு முழுமையாக வளர்ச்சியடைந்துள்ளது என மருத்துவ குழு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, 12 வயது சிறுமியின் கருக்கலைப்பு  செய்ய அனுமதி வழங்கமுடியாது என தெரிவித்தது. இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், “கரு 34 வாரங்கள் ஆகிறது, முழுமையாக வளர்ச்சியடைந்து, கருப்பைக்கு வெளியே கரு வளர தயாராகி உள்ளது. இந்த நிலையில் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அந்த சிறுமியை அவரது சகோதரர் நெருங்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் தொடர்ந்து உதவி பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது”

 

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

1 hour ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

2 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

3 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

6 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

7 hours ago