Categories: இந்தியா

ஜார்கண்ட் முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.!

Published by
மணிகண்டன்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதலமைச்சாக ஹேமந்த் சோரன் மாநில ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார்.

நிலமோடி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரியில் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார் ஹேமந்த் சோரன். அதற்கு முன்னதாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து இருந்தார் சோரன். அவருக்கு பதிலாக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் JMM மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பில் இருந்தார்.

கடந்த வாரம் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட வழக்கில் போதிய ஆதாரமில்லை என்று கூறி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி இருந்தது ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம். இதனை அடுத்து, சம்பாய் சோரன் நேற்று ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பின்னர், இன்று மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரி கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்தார்.  இதனை தொடர்ந்து ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அறிவித்தது போல, தற்போது ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஹேமந்த் சோரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 3வது முறையாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

9 minutes ago
ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

10 minutes ago
மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

32 minutes ago
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

1 hour ago
+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

1 hour ago
என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

2 hours ago