கர்நாடகாவில் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க உதவி எண்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒவ்வொரு மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு பல மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில், தடுப்பூசி , ஆக்சிஜன், படுக்கைகள் பற்றாக்குறை பல இடங்களில் காணப்படுகிறது.
இந்நிலையில், தொற்றால் இறந்தோரை அடக்கம் பண்ணுவதற்கு கூட இடம் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள பீன்யா, கெங்கேரி, சம்மனக்கல்லி, பகதூர் உள்ளிட்ட 18 இடங்களில் உள்ள எரியூட்டும் தளங்களில் முன்பதிவு செய்து உடலை எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு எரியூட்டும் தளத்தில் 500 சடலங்கள் வரை எரிக்க முடியும். தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனை அல்லது வீட்டில் உயிரிழக்கும் பட்சத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 84 95 99 84 95 என்ற உதவி எண்ணை அழைத்து அல்லது வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தேவையை இடம், நேரம், மற்றும் சில தகவல்களை பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். சடலங்களை எடுத்துக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸுக்கோ, எரியூட்டும் தளத்திற்கோ கட்டணம் கொடுக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…