குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் கடந்த 8 ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கேப்டன் வருண் சிங்கை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடி வருவதாகவும், கேப்டன் வருண் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் உயிரிழந்தார். இதனால் குன்னூர் அருகே காட்டேரியில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 13 இருந்து 14 ஆக உயர்ந்துள்ளது.
முப்படை தளபதி உட்பட 13 பேர் கடந்த 8ஆம் தேதி உயிரிழந்த நிலையில் தற்போது கேப்டன் வருண் சிங் உயிரிழந்துள்ளார். கேப்டன் வருண் சிங் உயிரிழந்ததை தொடர்ந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பெரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…