டெல்லியில் சாகச பயிற்சியின்போது ஹெலிகாப்டரிலிருந்து விழுந்த வீரர்கள் காயம்!

Default Image

ஆண்டுதோறும் ஜனவரி 15-ஆம் தேதி கொண்டாடப்படும் ராணுவ தின விழாவின்போது, வீரர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்துவது வழக்கம். இந்த ஆண்டு ராணுவ தினத்துக்காக டெல்லியில் உள்ள கன்டோன்மென்ட் மைதானத்தில், நேற்று வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்திருந்தனர்.
ஹெலிகாப்டரில் கயிற்றில் தொங்கியவாறே சாகசம் செய்ய 3 வீரர்கள் பயிற்சி எடுத்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து விழுந்ததால், அவர்கள் மூவரும் அடுத்தடுத்து கீழே விழுந்தனர். இதில் காயமுற்ற 3 பேரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்