நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் பெய்த மழையால் 868 பேர் உயிரிழப்பு.!

Published by
Ragi

நாடு முழுவதும் உள்ள 11 மாநிலங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 868 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பல இடங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. குஜராத், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. மேலும், பீகார், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் உள்ள சில பகுதிகளில் ஜூலை மாதத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதனையடுத்து கர்நாடகா மும்பை, கொங்கன் மற்றும் ராஜஸ்தானில் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும்  சூழல் ஏற்பட்டது. மேலும் பரவலாக பெய்து வரும் மழையால் போக்குவரத்து வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டமும் அதிகரித்தும் வருகிறது. மேலும் கேரளாவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 58 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் 11 மாநிலங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 868 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு வழக்கத்துக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. கடந்தாண்டு மழைப்பொழிவால் உண்டான வெள்ளத்தில் சுமார் 908பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆகஸ்ட் 19 அன்று உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வருகின்ற தினங்களில் அதிக மழை பெய்ய கூடும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானியான ஆர்கே ஜெனமணி தெரிவித்துள்ளார்.

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago