இனி ஏ.டி.எம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்..! எஸ்பிஐ அதிரடி அறிவிப்பு ..!

Published by
murugan

ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் தங்களது வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஒரு புதிய வசதியை  நாடுமுழுவதும் அறிமுகப்படுத்த உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. முன்பு நாம் கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிக்கு நேரில் சென்று வரிசையாக நின்று பணம் எடுத்து வரும் நிலைமை இருந்தது.

இதனால் வங்கிகளில் கூட்டத்தை குறைக்கவும், வங்கிகளுக்கு தங்களது வாடிக்கையாளர்கள் வராமல் எளிதாக பணம் எடுக்கவும் கொண்டுவரப்பட்டது தான் ஏ.டி.எம் கார்டுகள். தற்போது எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு இன்னும்  எளிமையாக பணம் எடுக்க ஏ.டி.எம் கார்டுகள் இல்லாமலே ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் புதிய முறை அறிமுகம் செய்ய உள்ளது.

இதற்காக கடந்த மார்ச் மாதம்  15-ம் தேதி முதல் சில இடங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இந்த முறை சோதனை வைத்து வெற்றி பெற்றதை தொடர்ந்து நாடு முழுவதும் இனி யோனோ மொபைல் ஆப்பை பயன்படுத்தி  ஏ.டி.எம்மில்  கார்ட் இல்லாமல் பணம் எடுக்கும் முறை அறிமுகம் செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் கூறியுள்ளார்.

இந்த யோனோ மொபைல் ஆப்  மூலம் 6  ரகசிய எண்ணை கொண்டு வாடிக்கையாளர்கள்  பணத்தை எடுக்க முடியும் . இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனை மூலமாக  ரூ.10000 வரை எடுக்க முடியும். ஒரு நாளைக்கு 2 முறை மட்டும்  இந்த மொபைல் ஆப்ஸை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும்.

 தற்போது நாடு முழுவதும் 68,000 யோனோ கேஷ் பாயிண்டுகள் உள்ளது. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் யோனோ கேஷ் பாயிண்டுகள் உயர்த்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

 

Published by
murugan

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

8 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

8 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

9 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

10 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

12 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

13 hours ago