மது பாட்டில்களில் சுகாதார எச்சரிக்கை ஸ்டிக்கர்களை ஒட்டக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
சிகரெட் பாக்கெட்டுகளில் இருப்பது போன்று மது பாட்டில்களிலும், சுகாதார எச்சரிக்கை அடங்கிய ஸ்டிக்கர் ஓட்ட வேண்டும் என கோரி பொது நல மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சிகரெட்டை விட மதுபானம் 10 மடங்கு தீங்கு விளைவிக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளால், சிகரெட் பாக்கெட்டுகளில் சுகாதார எச்சரிக்கைகள் கட்டாயமாக்கப்பட்டன.
அதே போல் மது பாட்டில்களிலும் இவ்வாறு எச்சரிக்கை ஸ்டிக்கர்களை கட்டாயமாக வேண்டும் என்று பொதுநல மனுதாரரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் எஸ் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற முடிவுகள் அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தின் கீழ் வரும் என்றும் கொள்கை விஷயங்களில் நீதி மன்றங்கள் தலையிட முடியாது எனவும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…