பள்ளிகளை திறக்க அனுமதி ! வழி காட்டு நெறிமுறைகள் என்னென்ன ?

Published by
Venu

செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், 4 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பள்ளிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது .

வழி காட்டு நெறிமுறைகள் :

  • செப்டம்பர் 21 -ஆம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் ஆலோசனை பெறலாம்.
  • 6 அடி தனிமனித இடைவெளியை மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளிகளில் எச்சில் துப்புவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை, பெற்றோரின் ஒப்புதல் பெற்ற பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் ஆலோசனை பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கு வரும் மாணவர்கள் பேனா,பென்சில்,அழிப்பான்,நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவற்றை  பகிர்ந்துக்கொள்ளக்கூடாது.
  • வகுப்பறைகளுக்குள் கொரோனாவை  தடுக்க பள்ளிகளில் வெவ்வேறு கால அட்டவணைகள் பின்பற்ற வேண்டும்.பள்ளிகளை தொடங்குவதற்கு முன்னர்  முழுவதுமாக சுத்தப்படுத்த வேண்டும்.பள்ளியில் உள்ள வருகைப் பதிவேட்டை தொடுதல் இல்லாத வகையில் பயன்படுத்த வேண்டும்.
  • பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகள்,வாழிபாடுகள்,விளையாட்டுகள், மாணவர்கள் கூடுதல் உள்ளிட்டவற்றை  கட்டாயம் தவிர்க்க வேண்டும்.பள்ளிகளில்  முடிந்த அளவு இயற்கையான காற்றைச் சுவாசிக்க வேண்டும். பள்ளிகளில் உள்ள நீச்சல் குளங்களை திறக்க அனுமதி கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

12 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago