விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
நாடு முழுவதும் வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்தார். இதனால் அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் நாடு முழுவதும் உளநாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு மே 31 வரை அமலில் இருக்கும் நிலையில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டு வருவதற்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, வரும் 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என்றும் 15 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அவசியம் இல்லை என்று இந்திய விமான போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் உள்நாட்டு விமான சேவைக்கு முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…