ஆந்திராவில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தனது பென்சிலை ஒருவன் திருடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த ஹனுமந்த் எனும் சிறுவன் ஒருவன் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன் நேற்று அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சில மாணவர்களுடன் சென்று அதில் ஒரு மாணவன் தனது பென்சிலை திருடி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போலீசார், இருவரும் கைகுலுக்கி சமாதானம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் போலீசில் புகார் அளிக்க சென்றிருந்த சிறுவன் ஹனுமந்த் என்னுடைய பென்சிலை அவன் திருடி உள்ளான், எனவே அவன் மீது நீங்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பிடிவாதமாக போலீசாரிடம் கூறியுள்ளார். அதற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தால் நீதிமன்றம், ஜாமீன் என பென்சில் திருடிய மாணவனின் பெற்றோர் அலைய வேண்டியிருக்கும் என கூறியுள்ளனர்.
இதனை அடுத்து ஹனுமந்த் சரி நான் அவன் பெற்றோரிடம் இது பற்றி பேசிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளான். சிறுவனின் இந்த செயலை கண்டு மெய்சிலிர்த்த போலீசார் அவனை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு படிக்க கூடிய சிறுவனின் இந்த புத்தி கூர்மை பலரையும் வியக்க வைத்துள்ளது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…