டெல்லி சோனியா காந்தி இல்லத்தில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், அக்கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘இந்த நாட்டைக் காக்க,எவ்வித சமரசமும் இல்லாமல்,ஆர்எஸ் எஸ்/பாஜகவை எதிர்த்துப் போராட தலைவர் ராகுல்காந்தியால் மட்டுமே முடியும். இந்த தேசத்தின் ஆன்மாவை அதற்குரிய அத்தனை மகத்துவத்தோடும் புரிந்துகொண்டுள்ள தலைவர் அவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் உடனே பொறுப்பேற்க வேண்டும்.
எவ்வளவு தோல்விகள் வந்தாலும், துணிச்சலோடு களத்தில் நின்று,போராடி வெல்பவரே உண்மையான தலைவர்.அப்படிப்பட்ட கொள்கை உறுதியும்,மக்கள் மீது மாறாத அன்பும், துணிச்சலும் மிகுந்த தலைவர் ராகுல்காந்தி.அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவது உறுதி.’ என பதிவிட்டுள்ளார்.
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…