#BigBreaking:உயர்நீதிமன்ற நீதிபதிகள்,அதிகாரிகளுக்கான அசோகா ஹோட்டல் 100 அறைகள் உத்தரவு வாபஸ்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அசோகா ஹோட்டலின் 100 அறைகளை கொரோனா சுகாதார நிலையமாக மாற்றுவதற்கான உத்தரவை வாபஸ் பெறுவதாக டெல்லி அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவுகளை பிறப்பித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்றம்”மக்களுக்கு படுக்கைகள் கிடைக்காதபோது, நீங்கள் அத்தகைய உத்தரவுகளை அனுப்புகிறீர்களா? எங்களை சமாதானப்படுத்துவதா? இது போன்ற சிறப்பு வசதியை நீங்கள் உருவாக்க முடியாது. நாங்கள் அதை ஒருபோதும் கேட்கவில்லை.”
இத்தகைய உத்தரவுகள் நீதித்துறை குறித்து தவறான திட்டத்தை அளிக்கின்றன என்று கூறிய விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,, “உடனடியாக சரியான நடவடிக்கைகளை எடுக்க” டெல்லி அரசுக்கு உத்தரவிட்டது.
முதலமைச்சர், அவரது துணை அல்லது சுகாதார அமைச்சர் ஆகியோர்களுக்கு தெரியாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்.அந்த உத்தரவின் நகல் கூட அவர்களில் யாருக்கும் கொடுக்கப்படவில்லை” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உத்தரவு தொடர்பான கோப்புகள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா க்கு வரவழைக்கப்பட்டு , அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதை ஆராய்ந்து,தற்பொழுது உத்தரவு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)