“பவானிப்பூர் தேர்தலில் முதல்வர் மம்தா தோற்கப்போவது அவருக்கே தெரியும்” – பாஜக தலைவர் திலீப் கோஷ்..!

Published by
Edison

பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியிலும் தான் தோல்வியடையக்கூடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தெரியும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் பவானிப்பூர், ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து,மேற்குவங்க பவானிப்பூர் இடைத்தேர்தலில் போட்டியிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி செப்டம்பர் 10 ஆம் தேதி  வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்ற மம்தா பானெர்ஜி பவானிப்பூரில் போட்டியிடுகிறார்.

இதனையடுத்து,பவானிப்பூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் நாளை வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில்,இது தொடர்பாக மேற்கு வங்க பாரதீய ஜனதா (பிஜேபி) தலைவர் திலீப் கோஷ் கூறுகையில்:”நந்திகிராமைப் போலவே பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியிலும் தான் தோல்வியடையக்கூடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜிக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:

“பவானிப்பூர் தொகுதியில் வெற்றி பெறுவதில் அவருக்கு நம்பிக்கை இருந்தால் வீட்டில் உட்கார்ந்து கொள்ளட்டும்.ஆனால்,நந்திகிராமைப் போலவே இந்த தொகுதியையும் இழக்க நேரிடும் என்று அவருக்குத் தெரியும்.

முன்னதாக,மம்தா பானர்ஜி சோம்நாத் சாட்டர்ஜிக்கு எதிராக தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றபோது, ​அவரை யாரும் அறிந்திருக்கவில்லை. அரசியலில் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது. அதேபோலவே,நந்திகிராம் தொகுதியில் இருந்து பாஜக தலைவர் சுவேந்து ஆதிகாரி 1,956 வாக்குகள்,முதல்வர் மம்தா பானர்ஜியை தோற்கடித்தார்.

மம்தா பானர்ஜி தான் வெற்றி பெறுவார் என்று நினைத்து நந்திகிராமில் இருந்து போராடினார், ஆனால் அவர் தோற்றார். தேர்தலுக்கு பிந்தைய வன்முறைக்கு எதிரான நீதிக்கான போராட்டத்தை பிரியங்கா திப்ரிவால் வழிநடத்தினார், அதனால்தான் நாங்கள் அவரை இந்த தொகுதியில் நிறுத்தினோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,”அனைத்து அமைச்சர்களும் (டிஎம்சி அமைச்சர்கள்) மம்தாவுக்கு ஆதரவாக தொகுதியின் தெருக்களில் சுற்றித் திரிகிறார்கள், இதன் பொருள் தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே கட்சி பின்வாங்கியுள்ளது என்று தெரிகிறது”,என்று கூறினார்.

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

7 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

9 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

10 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

11 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

12 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

12 hours ago