ரூ.500 கோடி சொத்து இருப்பது தவறான செய்தி.. நாங்கள் சிரமத்தில் இருக்கிறோம்.. விகாஸ் துபே மனைவி.!

Published by
murugan

சமீபத்தில்  பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்டார். விகாஸ் துபே மனைவி நேற்று கூறுகையில், தனது கணவர் குற்றத்தின் பாதையை விட்டு வெளியேற முயற்சிக்கவில்லை என்று கூறினார், இப்போது அவர் இறந்துவிட்டதால் குடும்பம் மிகுந்த சோகத்தில் உள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை விகாஸ் துபே வாங்கியதாகக் கூறப்படுவது குறித்து கூறிய விகாஸ் துபே  மனைவி,  “அந்த செய்தி போலி ” என்றும், கணவர் தங்களைத் தற்காத்துக் கொள்ள குடும்பத்தை விட்டு வெளியேறி விட்டார் என்றும் கூறினார்.

அவர் எங்களுக்காக எதையும் விடவில்லை. அவர் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்தை விட்டுவிட்டு சென்றுள்ளார் என்று மக்கள் கூறலாம், ஆனால் உண்மை என்னவென்றால் என்னிடம் எதுவும் இல்லை, என துபே மனைவி ரிச்சா துபே ஒரு தொலைக்காட்சி செய்தி சேனலிடம் தெரிவித்தார்.

சற்று யோசித்துப் பாருங்கள், ஒரு நபருக்கு கோடி கணக்கில் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவரது மனைவி லக்னோவில் 1,600 சதுர அடி வீட்டில் வசிப்பாரா.?  என விகாஸ்  துபே மனைவி ரிச்சா துபே கூறினார்.

மேலும், பிக்ரு கிராமத்தில் தனது மாமியார் இருக்கும் இடத்தின் சூழ்நிலை தனக்கு பிடிக்கவில்லை என்றும், தனது குழந்தைகளை குற்ற உலகத்திலிருந்து விலக்கி வைப்பதற்காக, கடந்த 2008-ஆம் முதல் லக்னோவில் வாழத் தொடங்கினார் என்றும் போலீஸ்காரர்களைக் கொல்லும் திட்டத்தைப் பற்றி விகாஸ் என்னிடம் கூறியிருந்தால், அவரைத் தடுக்க நான் எல்லா முயற்சிகளையும் செய்திருப்பேன் என்று அவர் கூறினார்.

Published by
murugan

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

5 mins ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

24 mins ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

53 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

1 hour ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

1 hour ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

2 hours ago