கொரோனாவால் இத்தனை குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனரா! தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் தகவல்!

Published by
Rebekal

இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் 1,742 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரித்து வரும் நிலையில், இது குறித்து கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் பெற்றோரை இறந்த குழந்தைகளின் விபரம் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து மே 30-ஆம் தேதிக்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.

மேலும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மே 31-ஆம் தேதிக்குள் இது குறித்து முறையான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்தியாவில் இதுவரை தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு 1,742 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 9,346 குழந்தைகளின் பெற்றோரை இழந்துள்ளதாகவும், அதில் 1742 குழந்தைகள் தாய் தந்தை இருவருமே இறந்துள்ளதாகவும், 140 குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும், மேலும் 7,464 குழந்தைகள் தாய் தந்தை யாரேனும் ஒருவரை இழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இதுவரை 16 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாகவும், 143 குழந்தைகள் தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவரை இழந்துள்ளதாகவும் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

39 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

55 minutes ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

1 hour ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

1 hour ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago