“திருக்குறல்” படித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக தேசிய தலைவர்கள் தமிழ் மொழியின் இலக்கியமான திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி வருகின்றனர்.அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுவைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
” கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை “
என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி பேசினார். கல்வி எனும் அதிகாரத்தில், குறள் எண் 400-ல் இந்த குறள் இடம்பெற்றுள்ளது .
இதன் பின் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் “
என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.உழவு எனும் அதிகாரத்தில், குறள் எண் 1033-ல் இந்த குறள் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு தேசிய தலைவர்கள் தமிழ் மொழியின் இலக்கியம் குறித்து பேசி வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், “திருக்குறல்” படித்து வருகிறேன். அதன் ஆழத்தால் திகைத்துப் போகிறேன்.கேட்க, கேட்க, உங்கள் காதுகள் வழியாக புரிந்துகொள்ளும்.தானியத்தின் தங்கத்தையும், மணல் தங்க தானியத்தையும் உருவாக்குவதாகும் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…