சீனாவின் ஆக்ரோஷத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால் இரு நாடுகளின் படைகள் கடந்த சில நாட்களாக குவிக்கப்பட்டது.இதனிடையே கடந்த ஜூன் 15 -ம் தேதி(அதாவது திங்கட்கிழமை) இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.தொடர்ந்து நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,சீனாவின் ஆக்ரோஷத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.சீனா இந்தியாவின் எல்லைப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பதிவிட்டுள்ள புகைப்படம் அவரது தந்தையும் ,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த புகைப்படமும் ஆகும்.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…