உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. நகரம், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு எப்படி ஒரே மாதிரியான வருமான வரம்பை நிர்ணயிக்க முடியும்? என்றும் வருமான வரம்பை நிர்ணயிக்க அறிவியல் பூர்வமான ஆய்வு ஏதாவது செய்யப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பியது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான சான்றிதழை வட்டாட்சியரிடம் பெற வேண்டும் என்கீறீர்கள். வட்டாச்சியர் எந்த அடிப்படையில் வருமான சான்றிதழ் வழங்குகிறார் எனவும் உச்சநீதிமன்றம் சரமாரியாக கேட்டுள்ளது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விசாரணையின் போது இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் தனி மனித வருமானம் மாறுபடும் போது, EWS பிரிவுக்கு ஒட்டுமொத்தமாக வருமான வரம்பை எப்படி நிர்ணயித்தீர்கள்? என்றும் 10% இடஒதுக்கீட்டில் வரம்பு நிர்ணயம் செய்தது எப்படி? எனவும் கேட்டு, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…