ஹரியானா: 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு செப்.20 முதல் பள்ளிகள் திறப்பு..!

Published by
Sharmi

ஹரியானா மாநிலத்தில் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20 முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா அலையில் சிக்கி தவித்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனை அடுத்து ஆன்லைன் வகுப்புகளை மாணவர்களுக்கு கடைபிடித்து வந்த நிலையில், கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியவுடன் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.

ஹரியானா அரசு செப்டம்பர் 20 முதல் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைத் திறக்கவுள்ளது. இதன் வகுப்புகள் கண்டிப்பாக கொரோனா நெறிமுறையைப் பின்பற்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் முதலில் ஜூலை 16 முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.  பின்னர், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 23 அன்று பள்ளிகள் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இப்போது 1 முதல் 3 வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் செப்டம்பர் 20 அன்று திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், பெற்றோரிடமிருந்து முன் அனுமதி கடிதம் பெற்று வரும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் வெப்பப்பரிசோதனை செய்யப்படும். சாதாரண வெப்பநிலைக்கு மேல் இருக்கும் மாணவர்கள் யாரும் பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

13 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

13 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

14 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago