ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் எனுமிடத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி இருக்கிறது. ஒரே இடத்தில் அதிகமான ஊழியர்கள் வேலை செய்வதும் இதற்கு காரணமாக அமைகிறது என அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், தொடர்ந்து அதே போலதான் பல்வேறு இடங்களிலும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் எனும் இடத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள காவல்த்துறையினர், மேலும் வெடி விபத்து குறித்த விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…