நள்ளிரவு முதல் இணைய சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவையை துண்டித்த ஹரியானா அரசு…!

Published by
Rebekal

ஆகஸ்ட் 28 ஆம் தேதி விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கர்னாலில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும், ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி இந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், சுஷில் கஜ்லா எனும் விவசாயி உயிரிழந்தார். ஆனால், அவர் மாரடைப்பால் தான் உயிரிழந்தார் என போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.

இந்நிலையில் இதை கண்டித்து ஹரியானா மினி தலைமை செயலகம் நோக்கி விவசாய சங்கத் தலைவர்கள் பேரணி நடத்த திட்டமிட்டு பாரதீய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத், ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் மற்றும் சில விவசாயிகள் பேரணியாக சென்றனர். ஆனால், இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி தரவில்லை. இருப்பினும் தடையை மீறி செல்ல முயன்றதால் பேரணியில் ஈடுபட்ட தலைவர்கள் சிலர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் விதமாக கர்னால் மாவட்டம் முழுவதும் இன்டர்நெட் சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை இணைய சேவைகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், போலீசாரின் தடியடியால் உயிரிழந்த விவசாயி மரணத்துக்கு அரசு பதில் சொல்ல வேண்டும் எனவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகேஷ் திகைத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recent Posts

நடிகர் ஸ்ரீக்கு என்ன நடந்தது? உண்மையை உடைத்த நெருங்கிய நண்பர்!

நடிகர் ஸ்ரீக்கு என்ன நடந்தது? உண்மையை உடைத்த நெருங்கிய நண்பர்!

சென்னை :  ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…

46 minutes ago

“என் வாழ்நாள் பெருமை., மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிட தேவையில்லை!” முதலமைச்சர் பெருமிதம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…

1 hour ago

யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்.. அது எங்கள் இஷ்டம்! எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…

2 hours ago

NDA கூட்டணியில் பாமக இருக்கா.? இல்லையா.? அன்புமணி பதில் என்ன?

சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…

2 hours ago

இந்தியாவுக்கு ஆடியபோது கிடைக்கல ஆனா ஆர்சிபிகாக கிடைச்சது! ஜிதேஷ் சர்மா எமோஷனல்!

பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…

3 hours ago

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

சென்னை :  வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…

3 hours ago