ஆகஸ்ட் 28 ஆம் தேதி விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கர்னாலில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரியும், ஹரியானா மாநிலம் கர்னால் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி இந்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில், சுஷில் கஜ்லா எனும் விவசாயி உயிரிழந்தார். ஆனால், அவர் மாரடைப்பால் தான் உயிரிழந்தார் என போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.
இந்நிலையில் இதை கண்டித்து ஹரியானா மினி தலைமை செயலகம் நோக்கி விவசாய சங்கத் தலைவர்கள் பேரணி நடத்த திட்டமிட்டு பாரதீய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகைத், ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் மற்றும் சில விவசாயிகள் பேரணியாக சென்றனர். ஆனால், இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி தரவில்லை. இருப்பினும் தடையை மீறி செல்ல முயன்றதால் பேரணியில் ஈடுபட்ட தலைவர்கள் சிலர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் விதமாக கர்னால் மாவட்டம் முழுவதும் இன்டர்நெட் சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 11.59 மணி வரை இணைய சேவைகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், போலீசாரின் தடியடியால் உயிரிழந்த விவசாயி மரணத்துக்கு அரசு பதில் சொல்ல வேண்டும் எனவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகேஷ் திகைத் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…