Haryana : ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜனநாயக ஜனதா கட்சி (JJP) 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. சுயேட்சைகள் 7 தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தனர்.
இறுதியில் பாஜக மற்றும் ஜேஜேபி கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து அமைத்தனர். ஹரியானா மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டார் முதல்வர் பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட திட்டமிட்டு இருந்தது. இதனால் கூட்டணி கட்சியான JJP கட்சி தனது ஆதரவை பின்வாங்கியது.
இதனை அடுத்து ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார். தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா (JJP) மற்ற அமைச்சர்கள் பொறுப்பில் இருந்தும் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்த்தனர். இதனை அடுத்து ஹரியானா மாநில புதிய முதல்வர் யார் என்று கேள்வி எழுந்தது.
தற்போது, பாஜக எம்ஏஏக்கள் , சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது. இந்த முறை முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதனை அடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி பாஜக எம்எல்ஏக்கள் உடன், நயாப் சிங் சைனி ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயாவை சந்தித்து உள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…