ஹரியானா :75 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி .. 2 ஹோட்டல்கள் சீல் வைப்பு

Published by
Ragi

ஹரியானாவில் 75 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 2 ஹோட்டல்கள் சீல் வைக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து 50 கி. மீ தூரத்தில் ஹரியானாவின் முர்தாலில் உள்ள அம்ரிக் – சுக்தேவி தபாவில்(ஹோட்டல்) உள்ள 65 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த ஹோட்டல் வியாழக்கிழமை அன்று சீல் வைக்கப்பட்டது. அதே போன்று மற்றொரு ஹோட்டலில் பணிபுரியும் 10 தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஹோட்டலை சீல் வைத்தனர்.

சோனிபட் துணை ஆணையர் ஷியாம் லால் பூனியா இதுகுறித்து கூறியதாவது, மேலிடத்தில் இருந்து உத்தரவுகள் வரும் வரை இரண்டு ஹோட்டல்களும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் , கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 75 பேருக்கு எவ்வாறு பரவியது என்பதை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் உணவகங்களை சுத்தப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். டெல்லி-அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த இரண்டு ஹோட்டல்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றும், மேலும் அனைத்து ஹோட்டல்களும் அனைத்து விதிமுறைகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். வியாழக்கிழமை கணக்கின் படி , ஹரியானாவில் 1,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சோனிபட் மாவட்டத்தில் புதிதாக 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,747 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 41 ஆகவும் உயர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

Published by
Ragi

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago