14 மாவட்டங்களில் பட்டாசு விற்க, வெடிக்க தடை – ஹரியானா அரசு!

Published by
Rebekal

ஹரியானா மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வருகிற நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது முதல் எடுக்கப்பட்டு வருகிறது. ஒருசில மாநிலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு கால நேரங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் பட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஹரியானாவில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும் டெல்லிக்கு அருகிலுள்ள பிவானி, சர்கி தத்ரி, பரிதாபாத், குருகிராம், ஜஜ்ஜார், ஜிந்த், கர்னல், மகேந்திரகர்க், நுக்,பல்வல், பானிபட், ரேவரி, ரோதக் மற்றும் சோனிபட் ஆகிய 14 மாவட்டங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளுக்கு ஆன்லைன் மூலமாகவும் பட்டாசுகளின் விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் டெல்லியில் காற்றின் தரம் மோசமானதை தொடர்ந்து அங்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ஹரியானா மாநிலத்திலும் டெல்லியை ஒட்டியுள்ள இந்த 14 மாவட்டங்களுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளுக்கு கூட பசுமை பட்டாசுகளை தான் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மேம்பட்ட பகுதிகளில் மட்டும் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

16 minutes ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

42 minutes ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

1 hour ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

1 hour ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

2 hours ago

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

9 hours ago