அரியானா வங்கியில் ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பித்தவருக்கு ஏற்கனவே ரூ. 50கோடி கடனை பாக்கி வைத்துள்ளதாக டீக்கடை காரருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
அரியானா மாநிலத்தில் உள்ள குருக்சேஷ்த்ராவை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, கடையை மூட வேண்டிய சூழ்நிலை ராஜ்குமாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் டீக்கடையை திறப்பதற்காக வங்கியில் ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
அதனையடுத்து அரியானா வங்கி கடனுக்கான ஆவணங்களை சரிபார்த்த பின்னர், நீங்கள் ஏற்கனவே ரூ. 50 கோடி கடனை பாக்கி வைத்துள்ளீர்கள். ஏற்கனவே கடன் வாங்கி விட்டு, இப்போது மீண்டும் கடன் கேட்கிறீர்கள், முதலில் இருக்கிற கடன் பாக்கிய கட்டுங்கள் என்று வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. இது ராஜ்குமாருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண டீக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டி வரும் நான் எப்படி 50கோடி கடன் வாங்குவேன், இதுவரை நான் எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…