அனுமன் கோவில் கட்ட தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய முஸ்லீம் மதத்தை சேர்ந்த நபர்!

Published by
லீனா

பெங்களூருவில், அனுமன் கோவில் கட்ட தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய முஸ்லீம் மதத்தை சேர்ந்த பாஷா என்பவருக்கு கிராம மக்கள் சுவரொட்டிகள் அடித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். 

பெங்களூருவை சென்னைஹொஸ்கோட் அருகே இணைக்கும் நெடுஞ்சாலை அருகே ஒரு அனுமன் கோயில் உள்ளது. இந்த கோவில் மிகவும் சிறியதாக காணப்படுகிறது. இதனை அடுத்து, இந்த கோயிலை கட்டுவதற்காக எம்.ஜி.பாஷா என்னும் முஸ்லிம் நபர், தனது 1.5 குந்தாஸ் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கோவில் சிறியதாக இருப்பதால் பிரார்த்தனை செய்யும்போது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே எனது நிலத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க முடிவு செய்தேன். எனது குடும்ப உறுப்பினர்களும் இதற்கு ஒப்புக் கொண்டனர். இது சமுதாயத்திற்கு உதவும் என நம்புகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

இந்த கோவிலின் அறங்காவலர், இதுகுறித்து கூறுகையில், கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பாஷா முழுமனதுடன் கோயில் கட்டுமானத்திற்கு நிலத்தை நன்கொடையாக வழங்கினார். கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், பாஷாவின் தாராள மனதை பாராட்டும் வண்ணம் அவருக்கு சுவரொட்டிகள் அடித்து, கிராமவாசிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago