Categories: இந்தியா

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

Published by
அகில் R

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரங்களில் அவர் பிரதமர் மோடி குறித்து அவர் வைக்கும் விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் பெரும் தாக்கத்தை இதை தேர்தலில் ஏற்படுத்தி வருகிறது. அதிலும் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா நாட்டில் யாரும் பயன்பெறவில்லை என்று சொல்ல முடியாது.

மோடி செய்த நன்மைகளுக்கு அவர்கள் என்றென்றும் நன்றிக் கடன் செலுத்த வேண்டும். அவர்கள் வேறு யாருமில்லை பரம ஏழைகளான அம்பானியும், அதானியும் தான். இதை போல அவரது பல ஏழை நண்பர்களுக்காக ரூ.16 லட்சம் கோடியை மோடி தள்ளுபடி செய்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய விஷயம்?” என்று இப்படி மோடியை விமர்சித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதற்க்கு பிரதமர் நரேந்திர மோடியோ ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்து வருகிறார்.

மேலும், எந்த தொழிலதிபர்களுக்கும் நான் ஆதரவாகவும் செயல்படவில்லை எனவும் ஏழைகளுக்காகவே வாழ்நாள் முழுவதும் உழைக்கிறேன் எனவும் மோடி தற்போது பேசி வருகிறார். இந்த நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு இன்று பேட்டியளித்த மோடி அவர்கள் அந்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியதற்கு பதிலளித்து பேசி இருந்தார். அவர் கூறுகியில், “ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய பிரதமராக இருந்த காலத்தில், அவர் தொழிலதிபரான டாட்டா பிர்லாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் முன்வைத்தனர்.

இப்போது அந்த நேரு குடும்பம் என்னை அம்பானி, அதானிக்கு ஆதரவானவன் என்று சொல்கிறது. நம் நாட்டின் சுதந்திர தினத்தன்று விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சாதனையாளர்களை எப்படி கவுரவிக்காமல் இருக்க முடியும்? அப்படி செய்தது என் தவறா? மேலும், அம்பானி, அதானி மட்டுமல்ல வேறு யாருக்கும் நான் முறைகேடாக ஆதாயம் அளித்ததில்லை. அப்படி நான் யாருக்காவது ஆதாயம் அளித்ததாக நிரூபித்தால் நான் தூக்கில் தொங்கவும் தயாராக இருக்கிறேன்.

அதே போல இந்த நாட்டுக்கு வளம் சேர்க்கக்கூடிய தொழிலதிபர்களை நான் மிகவும் மதிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பணமும், தொழிலாளர்களின் உழைப்பும் இங்கே தேவைப்படுகிறது. முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களை இந்தியாவியிலிருந்து புறக்கணிப்பது நாட்டிற்கு நல்லது கிடையாது”, என அந்த தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago