ஹைதராபாத் மாநிலத்தில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் தொடக்கம்.!

Default Image

ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் ஒரு கட்டமாக மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், மெட்ரோ சேவை மியாப்பூர் – எல்.பி.நகர் பாதையில் மட்டுமே இயங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதற்கிடையில், பயணிகளின் உடலில் அதிக வெப்பநிலை அல்லது வேறு ஏதேனும் கொரோனா அறிகுறிகளை கொண்டிருந்தால், அவர்கள் ரயில் நிலையத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட அறையில் மருத்துவ உதவி வழங்கப்படும் என்று ஹைதராபாத் மெட்ரோ ரயில் லிமிடெட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்