ஹத்ராஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

Published by
Rebekal

ஹத்ராஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையாக கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி சந்திர பால் சிங் மற்றும் 100 பெண் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர் சத்யா துபே ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவாக தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், கீர்த்தி சிங், ஸ்ரீகுமார் யாதவ் சஞ்சய் மல்கோத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடி உள்ளனர். இந்நிலையில் இந்த வலக்கை சி.பி.ஐ வழக்காக மாற்ற வேண்டும் என உத்திர பிரதேச அரசு கோரியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திரா ஜெய்சிங் அவர்கள் கூறும் பொழுது சிபிஐ விசாரணை மீது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நம்பிக்கை இல்லை எனவும், சிறப்பு புலனாய்வு குழுவை உச்ச நீதிமன்றத்தில் நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பெண்ணின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே அவர்கள், ஹட்ராஸ் வழக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், உயிர் இழந்த பெண்களின் குடும்பத்தினருக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர்களை தேர்வு செய்து விட்டார்களா என்பதை கேட்டு அறிய வேண்டும் எனவும் குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளுக்கு அளிக்கப்படக் கூடிய பாதுகாப்பு குறித்த விவரங்களையும் உத்தரபிரதேச அரசு விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

12 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

20 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago