H3N2 தொற்றைத் தடுப்பதற்கான வழி முறைகளை எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.
H3N2 தொற்று : எச்3என்2 வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக மாறியுள்ளது. இந்த வைரஸ் ஒவ்வொரு ஆண்டும் மாற்றமடைந்து பரவுகிறது. H3N2 வைரஸ் என்பது இன்ஃப்ளூயன்ஸா எ வைரஸ் வகையைச் சேர்ந்த ஒன்றாகும். இந்த வைரஸ் தொற்று பொதுவாக பறவைகள் மற்றும் மனிதர்களை பெருமளவில் பாதிக்கிறது. டெல்லி எய்ம்ஸ்-ன் முன்னாள் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா, எச்3என்2 வைரஸால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்துப் பேசினார்.
வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவல் : அதில் H3N2 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள், காய்ச்சல், தொண்டை புண், இருமல், உடல்வலி மற்றும் மூக்கில் சளி போன்றவைகள் என்று டாக்டர் ரன்தீப் குலேரியா கூறினார். இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மக்களுக்கு அதிகம் பரவுவதாகவும், வானிலை மாறும்போது காய்ச்சல் வருவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது மற்றும் கோவிட்க்குப் பிறகு மக்கள் நெரிசலான இடங்களில் முகமூடிகளை அணியாமல் இருப்பதாலும் பரவுகிறது என்று கூறினார். முன்னதாக எச்1என்1 என்ற வைரஸ் தோற்று இருந்தது, அதன் மாறுபாடே தற்பொழுது எச்3என்2 ஆக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
தடுப்பு நடவடிக்கைகள் : கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுள் மூலம் இந்த தொற்றை தடுக்கலாம். அதாவது, நெரிசலான இடங்களில் முககவசங்களை அணிவதன் மூலம் எச்3என்2 வைரஸ் தொற்றை தடுக்கலாம் என்று டாக்டர் ரன்தீப் குலேரியா கூறினார். நாம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளியை பின்பற்றவேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…