ஹரியானா அரசு குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை மற்றும் தடையை ஒரு வருடத்திற்கு நீட்டித்தது.
குட்கா, பான் மசாலா விற்பனை மற்றும் தயாரிப்பதற்கான தடையை மேலும் ஒரு வருடத்திற்கு ஹரியானா அரசு நேற்று நீட்டித்தது. இதுதொடர்பாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்பக்கூடாது என்பதற்காக ஹரியானா அரசு குட்கா மற்றும் பான் மசாலா போன்ற அனைத்து புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் உற்பத்திக்கு ஒரு வருடம் தடை விதித்தது. அதாவது கடந்த செப்டம்பர் 7 -ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மாநில அரசு நேற்று முடிவு செய்தது. இதனால், ஹரியானாவில் அடுத்தாண்டு செப்டம்பர் வரை குட்கா மற்றும் பான் மசாலா போன்ற அனைத்து புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…