குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின்..!

குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
வருமானவரி புலனாய்வு இயக்குனரகம் குஜராத்தின் கட்ச் நகரின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கொண்ட கொள்கலன்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இவை ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக சரக்குகளை நிறுத்திய அதிகாரிகள், சோதனையின் போதுடால்கம் பவுடர் என்ற போர்வையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இவை ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ள ஆஷி டிரேடிங் நிறுவனத்தால் ஆப்கானிஸ்தானில் இருந்து முந்த்ரா துறைமுகத்திற்கு இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் அமைந்துள்ள ஹாசன் ஹுசைன் லிமிடெட் நிறுவனம் இதன் ஏற்றுமதி நிறுவனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக டிஆர்ஐ சுங்கச்சாவடியின் சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
காஷ்மீர் தாக்குதல்: பயங்கரவாதி ஹாசிம் மூஸா முன்னாள் பாரா கமாண்டோ.! அதிர்ச்சி தகவல்..,
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025