குஜராத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் பாஜகவில் இருந்து ராஜினாமா.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் டிச.1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் முதல் கட்டத்தில் 89 தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் டிசம்பர் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தற்போது குஜராத்தில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களை கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் 77 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ் இடையே தான் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த போட்டியில் ஆம் ஆத்மியும் இணைந்துள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த நிலையில், குஜராத்தில் 32 ஆண்டுகள் பாஜகவில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் கடிதத்தை மாநில பாஜக தலைவருக்கு அனுப்பியுள்ளதாக செய்தியாளர்களிடம் ஜெய் நாராயண் வியாஸ் கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் சுகாதார அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ், காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சியில் சேருவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்தாகவும், ஆதரவாளர்களை கலந்தலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார். மேலும், நான் பாஜகவால் சலிப்படைந்துவிட்டேன், வரவிருக்கும் குஜராத் தேர்தலில் சித்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…