15 லட்சம் புலம்பெயர்ந்தோரை ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் ஏற்றிச்செல்ல..குஜராத் ரூ.102 கோடி ரயில்வேக்கு வழங்கியது.!

Published by
கெளதம்

கொரோனா ஊரடங்கு போது 1,027 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்காக குஜராத் அரசு ரூ.102 கோடி ரயில்வேக்கு வழங்கியுள்ளது.

சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக ரயில்வே 2,142 கோடி ரூபாயை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க செலவழித்துள்ளது. ஆனால் வெறும் 429 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 844 ரயில்களில் 12 லட்சம் தொழிலாளர்களைக் கொண்டு செல்வதற்காக ரயில்வேக்கு ரூ .85 கோடி செலுத்தியது. 271 ரயில்களில் நான்கு லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழகம் ரூ .34 கோடி செலுத்தியது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான மூல மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்கள், உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்றவை ரூ .21 கோடி, ரூ .8 கோடி, ரூ .64 லட்சம் ஆகியவற்றை புலம்பெயர்ந்தோரை ஏற்றிச்செல்ல செலுத்தியுள்ளன.

செயல்பாட்டு செலவில் 15% மட்டுமே ரயில்வே மீட்டது:

தகவல் அறியும் விண்ணப்பத்தின் மூலம் பெறப்பட்ட தேதியின்படி, ஜூன் 29 ஆம் தேதி வரை ரயில்வே ரூ .428 கோடியை ஈட்டியது. தேசிய போக்குவரத்து 4,615 ஷ்ராமிக் ரயில்களை இயக்கியபோது. இது ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் ஒரு பயணிக்கு ரூ .3,400 செலவிட்டதைக் காட்டுகிறது. இது மொத்தம் 63 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ .2,142 கோடி ஆகும்.

தேசிய போக்குவரத்து போக்குவரத்து நடவடிக்கைகளில் 15 சதவீதத்தை மட்டுமே மாநிலங்களிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. மீதமுள்ள 85 சதவீதத்தை அமைச்சகம் ஏற்கிறது என்று ரயில்வே  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் ஒரு நபரின் சராசரி கட்டணம் ரூ .600 ஆகும். இருந்தாலும் நாங்கள் ஒரு பயணிக்கு ரூ .3,400 செலவிட்டோம் மொத்தம் ரூ .2,142 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே -1 முதல் 63 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்வதன் மூலம் நாங்கள் 429 கோடி ரூபாய் வருவாய் ஈட்டினோம் என்று அந்த அதிகாரி கூறினார்.

 

Published by
கெளதம்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago