தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

Published by
மணிகண்டன்

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவான ATS பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 4 பெரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் புகைப்படத்தையும் ATS பிரிவு காவல்துறையினர் வெளியிட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர் குஜராத் காவல் டிஜிபி விகாஷ் ஷாகாய் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை கூறினார்.

அவர் கூறுகையில், கைதானவர்கள் பெயர் முகமது நுஸ்ரத், முகமது நுஃப்ரான், முகமது பாரிஸ், முகமது ரஸ்தீன் என தகவல் கிடைத்தது. இந்த 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் (ஐஎஸ்ஐஎஸ்) உறுப்பினர்கள். இவர்கள் நால்வரும் இந்தியாவுக்குள் வந்து பயங்கரவாத தாக்குதல் நடத்த  திட்டமிட்டு இருந்தார்கள்.

இவர்கள் பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு இவர்களை பிடிக்க திட்டமிடப்பட்டது. தெற்கிலிருந்து வரும் ரயில்கள் மற்றும் விமானங்களின் பயணிகள் பட்டியல்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் 4 பேரும் ஒரே PNR எண் மூலம் சென்னையில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்று இண்டிகோ விமானம் மூலம் வருவது பற்றி தகவல் கிடைக்கப்பெற்றது. மேலும், இலங்கையிலும் இதுபற்றி விசாரணை செய்யப்பட்டது.

பிப்ரவரி 2024 முதல், இந்த 4 பேரும் பாகிஸ்தானில் வசிக்கும் ஐஎஸ்ஐஎஸ் தலைவரான அபு என்ற நபருடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த அபு, இவர்களுக்கு கூறியுள்ளான். தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஒப்புக்கொள்ளும் அளவுக்கு தீவிரவாதிகளாக இவர்கள் மாறி இருந்தார்கள். பாகிஸ்தானை சேர்ந்த அபுவும் இவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் கொடுத்தார். அவர்களிடமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.  அதில் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் உடன் தீவிர அங்கத்துவத்தை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.

அகமதாபாத் அருகே உள்ள நானா சிலோடா பகுதியின் புகைப்படம் மொபைல் போன்களில் இருந்தது. அதில் பயங்கரவாத தாக்குதலை நடத்த வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடம் இருந்தது. குறிப்பிட்ட இடத்தில் இருந்து பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட மூன்று கைத்துப்பாக்கிகள் மற்றும் 20 சுறுசுறுப்பான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. என பல்வேறு தகவல்களை குஜராத் டிஜிபி விகாஷ் ஷாகாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!

கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!

கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…

48 minutes ago
கோவை – நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்.! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!கோவை – நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்.! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

கோவை – நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்.! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…

1 hour ago
நடிகர் ராஜேஷ் மறைவு – திருமா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!நடிகர் ராஜேஷ் மறைவு – திருமா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!

நடிகர் ராஜேஷ் மறைவு – திருமா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!

சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின்…

2 hours ago

”அன்றே செத்துவிட்டேன்”.., அன்புமணி குறித்து காட்டமான கேள்விகளை எழுப்பிய ராமதாஸ்.!

சென்னை : டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் ஆதரவு குறைவாக இருந்ததால், அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என கூறப்பட்ட வந்த…

2 hours ago

பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்.!

சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…

3 hours ago

”தாயை அடிக்க முயன்றவர்.., வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து” – ராமதாஸ் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு.!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…

3 hours ago